திருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி ரூ.23,050 கோடி­யாக உயர்வுதிருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி ரூ.23,050 கோடி­யாக உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.54 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.54 ...
கடந்த ஏப்­ரலில்... தனியார் துறையில் சுணக்கம்; தயா­ரிப்பு, சேவை பிரி­வுகள் மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2016
05:01

புது­டில்லி : கடந்த ஏப்ரல் மாதத்தில், தனியார் துறையில், தயா­ரிப்பு மற்றும் சேவை நிறு­வ­னங்­களின் செயல்­பாடு, மந்த கதியில் இருந்­த­தாக, நிக்கி மார்கிட் அமைப்பின் கூட்­ட­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விவரம்:கடந்த ஏப்ரல் மாதம், இந்­தி­யாவின் பொரு­ளா­தார சூழல் நன்கு இருந்­தது. தயா­ரிப்பு மற்றும் சேவைகள் துறையில், சில நிறு­வ­னங்­களின் வர்த்­தகம் சிறப்­பாக நடை­பெற்­றது. அதே சமயம், சேவை துறையில் பிற நிறு­வ­னங்­க­ளுக்கு, புதிய ‘ஆர்­டர்’கள் குறை­வா­கவே கிடைத்­தன. தயா­ரிப்பு துறையை பொறுத்­த­வரை, முன்­னேற்­ற­மின்றி காணப்­பட்­டது. இரு துறை­க­ளிலும், வேலை­வாய்ப்பில் எந்­த­வித மாற்­றமும் காணப்­ப­ட­வில்லை. இது­போன்ற கார­ணங்­களால், கடந்த ஏப்­ரலில், தயா­ரிப்பு மற்றும் சேவைகள் துறை உற்­பத்தி அடிப்­ப­டை­யி­லான, ‘என்.ஐ.சி.பி.ஓ.,’ குறி­யீடு, 52.8 புள்­ளி­க­ளாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய மார்ச் மாதத்தில், 54.3 புள்­ளி­க­ளாக இருந்­தது.இதே காலத்தில், இந்­தி­யாவின் வர்த்­தக செயல்­பா­டுகள் அடிப்­ப­டையில் கணிக்­கப்­படும், ‘என்.எஸ்.பி.ஏ.,’ குறி­யீடு, 54.3ல் இருந்து, 53.7 புள்­ளி­க­ளாக குறைந்­துள்­ளது.
இந்­தாண்டு மார்ச் வரை, தொடர்ந்து மூன்று ஆண்­டு­க­ளாக, வேக­மாக வளர்ச்சி கண்டு வந்த தனியார் துறை, ஏப்­ரலில் மந்­த­ம­டைந்து உள்­ளது. பொருட்­களின் தேவைப்­பாடு குறைந்­துள்­ளதால், தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், வளர்ச்சி பாதையில் வலு­வாக நடை­போட முடி­யாமல் திணறி வரு­கின்­றன. கடந்த மாதம், சேவை துறை நிறு­வ­னங்கள் சுறு­சு­றுப்­புடன் செயல்­பட்டு வந்த சூழலில், அவற்­றுக்­கான வர்த்­தக வாய்ப்பில் தேக்க நிலை காணப்­பட்­டது.
எரி­சக்தி, மூலப்­பொருள் ஆகி­ய­வற்றின் செல­வுகள் அதி­க­மா­னதால், தயா­ரிப்பு மற்றும் சேவை நிறு­வ­னங்கள், ஏப்­ரலில், விற்­பனை விலையை மீண்டும் உயர்த்­தின. மதிப்­பீட்டு மாதத்தில், நிறு­வ­னங்கள் மித­மான அள­வி­லேயே விரி­வாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டன. அவற்றின் பணி­யாளர் எண்­ணிக்­கையும், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரிக்­க­வில்லை. அத்­துடன், வர்த்­தக வாய்ப்­பு­களும் குறைந்­துள்­ளன. இது போன்ற கார­ணங்­களால், கடந்த ஏப்­ரலில், தனியார் துறையின் உற்­பத்தி வளர்ச்சி சுணக்கம் கண்­டது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
கோரிக்கைரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு ஜன­வரி முதல், இந்­தாண்டு ஏப்ரல் வரை, வங்­கி­க­ளுக்­கான,‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 1.50 சத­வீதம்குறைத்­துள்­ளது. தொழில் வளர்ச்­சிக்கு, வட்டி விகி­தத்தை மேலும் குறைக்க வேண்டும் என, தொழில் துறை­யினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)