பதிவு செய்த நாள்
07 மே2016
07:41
மும்பை : ரேமண்ட் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், மூலதன செலவை, 250 கோடி ரூபாயாக குறைக்க முடிவு செய்துள்ளது. ரேமண்ட் நிறுவனம், ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலதன செலவு, 2015 – 16ம் நிதியாண்டில், 300 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியை, கடைகள் விரிவாக்கம், மறுசீரமைப்பு பணி, இயந்திரங்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகளுக்காக செலவு செய்தது. இந்நிலையில், தற்போது ரேமண்ட் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், தனது மூலதன செலவை, 300 கோடியிலிருந்து 250 கோடி ரூபாயாக குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 75 புதிய கடைகளை துவக்கவும், 50 கடைகளை சீரமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. கடும் போட்டி நிலவுவதால், சீனா, வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளில், ரேமண்ட் நிறுவனத்தின் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|