பதிவு செய்த நாள்
07 மே2016
07:43
சென்னை : தென் கொரியாவைச் சேர்ந்த, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், உலகளவில், கார் விற்பனையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் துணை நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா, சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில், 1996, மே 6ல் உற்பத்தியை துவக்கியது. நேற்றுடன், 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த இந்நிறுவனம், இந்தாண்டு ஏப்ரல் வரை, 41.89 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில், கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய், முதலிடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், 310 கோடி டாலர் முதலீடு செய்து, 10 மாடல்களில் கார்களை அறிமுகம் செய்துள்ளது.கடந்த, 1999ல், 20 கார்களுடன் ஏற்றுமதியை துவக்கிய ஹூண்டாய் நிறுவனம், இன்று, 23 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து, இப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|