பதிவு செய்த நாள்
07 மே2016
07:44
பெங்களூரு : எஸ்.பி.ஐ., வங்கி, மொபைல் போன் வாயிலாக பணம் செலுத்தும், ‘எம்விசா’ எனும் புதிய சேவையை துவக்கி உள்ளது.‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின், 2.80 கோடி வாடிக்கையாளர்களில், 60 லட்சம் பேர், இணையதள சேவை மூலம் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். இதன் அடுத்த கட்டமாக, மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் சேவையை இவ்வங்கி துவக்கி உள்ளது. வங்கியின், ‘டெபிட் கார்டு’ வைத்திருக்கும், ‘இன்டர்நெட் பேங்கிங்’ வாய்ப்பை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள், வணிகர்களுக்கான பிரத்யேக, ‘கியூ.ஆர்., கோடை’ தங்கள் மொபைல் போனில், ‘ஸ்கேன்’ செய்வதன் மூலமாக, பணத்தை அவர்களுக்கு எளிதாக செலுத்தலாம். இதன் மூலம் டெபிட் கார்டுகளை வணிகர்களின், ‘பாயின்ட் ஆப் சேல் மெஷினில்’ தேய்க்க வேண்டிய தேவை இருக்காது. விரைவில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவையை கொண்டு சேர்க்க இருக்கிறது எஸ்.பி.ஐ.,
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|