பதிவு செய்த நாள்
07 மே2016
07:46
புதுடில்லி : ‘அதிக மதிப்புள்ள சேவைகள் மற்றும், பலதரப்பட்ட பொருட்களை உயர் தரத்தில் தயாரித்து, ஏற்றுமதி செய்தால், இந்தியா மேலும் வளர்ச்சி காண முடியும்’ என, பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப்., தெரிவித்துஉள்ளது. அதன் அறிக்கை விவரம்: கடந்த, 1990 – 2013 வரையிலான காலத்தில், இந்திய சேவைகள் துறையின் ஏற்றுமதி, மிகச் சிறப்பாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், சேவை துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து, பணக்கார நாடுகளுக்கு நிகரான வளர்ச்சிக்கு அடிகோலியது. இந்தியா எண்ணற்ற, புதுமையான வாய்ப்புகளை உருவாக்கி, இடையறாத வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இதற்கு, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. இந்த தொழில்நுட்பம், ‘சாப்ட்வேர்’ உருவாக்கம், தகவல் சேமிப்பு, விற்பனை, ஏற்றுமதி என, அனைத்து வர்த்தக வளர்ச்சிக்கும் துணை புரிந்தது.அதேசமயம், தயாரிப்பு துறையின் ஏற்றுமதியை பொறுத்தவரை, வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. இத்துறை, பொருட்களின் தரம் மற்றும் மொத்த ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.புதிய சந்தைகளை, குறிப்பாக, தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும். ஓரளவு நவீன தொழில்நுட்பத்திலும், தரத்திலும் கவனம் செலுத்தி, தயாரிப்பு பொருட்களின் மதிப்பை உயர்த்தி, ஏற்றுமதி செய்தால், இந்தியாவுக்கு வளமான வருவாயும், ஏராளமான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|