ஏற்­று­ம­தியை உயர்த்த வழி­காட்டும் ஐ.எம்.எப்., ஏற்­று­ம­தியை உயர்த்த வழி­காட்டும் ஐ.எம்.எப்., ... தங்கம் விலை இன்று(மே 7) சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு தங்கம் விலை இன்று(மே 7) சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ...
வருது ‘அட்­சய திரு­தியை’ விலை உயர்வால் தங்கம் விற்­பனை பாதிக்கும்: வர்த்­த­கர்கள் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2016
07:48

மும்பை : தங்கம் விலை, கிடு கிடு­வென உயர்ந்து வரு­வதால், இந்­தாண்டு ‘அட்­சய திரு­தியை’ தினத்­தன்று, அதன் விற்­பனை மந்­த­மாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஆண்­டு­தோறும், சித்­திரை மாதத்தில், வளர்­பிறை காலத்தில் வரும் திரு­தியை, ‘அட்­சய திரு­தியை’ எனப்­ப­டு­கி­றது. அந்­நாளில், தங்க நகை வாங்­கினால், தொடர்ந்து தங்கம் சேரும் என, மக்­க­ளி­டையே நம்­பிக்கை நில­வு­கி­றது. அதனால், ஆண்­டு­தோறும் அந்­நா­ளன்று தங்க நகை வாங்க, கடை­களில் கூட்டம் அலை­மோதும். கடந்த ஆண்டு, சென்­னையில், அட்­சய திரு­தியை தினத்­தன்று, 500 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக விற்­பனை நடை­பெற்­றது. இந்­தாண்டு, வரும், 9ம் தேதி அட்­சய திரு­தியை வரு­கி­றது.
‘‘கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு தங்க நகை விற்­பனை வளர்ச்சி, மித­மா­கவே இருக்கும்,’’ என, ஜி.ஜே.எப்., எனப்­படும், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள் கூட்­ட­மைப்பின் தலைவர் ஸ்ரீதர் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: அட்­சய திரு­தியை அன்று, தங்க நகை விற்­பனை நன்கு இருக்கும் என, சந்­தையில் பொது­வான கருத்து நில­வு­கி­றது. ஆனால், தங்கம் விலை உயர்ந்­துள்­ளதால், பெரிய நகை­களை வாங்­கு­வது குறையும். சங்­கிலி, வளையல், மூக்­குத்தி, மோதிரம் போன்ற, சிறிய நகை­களின் பக்கம் மக்­களின் கவனம் திரும்பும் என, தெரி­கி­றது.கடந்த வாரம், சென்­னையில், 21,000 ரூபாய்க்கு விற்­ப­னை­யான, ஒரு சவரன் ஆப­ரண தங்­கத்தின் விலை, 22,824 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. அது­போல, கடந்த பிப்­ர­வ­ரியில், 26,930 ரூபா­யாக இருந்த, 10 கிராம் சுத்த தங்­கத்தின் விலை, 30,500 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. விலை உயர்வால், அட்­சய திரு­தியை அன்று, தங்கம் விற்­பனை மித­மா­கவே இருக்கும் என, தெரி­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.
‘‘அட்­சய திரு­தியை அன்று, தங்கம் விற்­பனை, 10 சத­வீதம் குறையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்ள போதிலும், விற்­பனை மதிப்பு, கடந்த ஆண்­டுக்கு நிக­ராக இருக்கும்,’’ என, ஜி.ஜே.எப்., முன்னாள் தலைவர் பச்ராஜ் பமல்வா தெரி­வித்­துள்ளார். ‘‘ஏற்­க­னவே பெறப்­பட்ட, ‘ஆர்­டர்’­களின் அடிப்­ப­டையில், அட்­சய திரு­தியை தினத்­தன்று, திரு­மண நகை­களின் விற்­பனை, விறு­வி­றுப்­பாக இருக்கும். தங்க கட்­டிகள், நாண­யங்கள் ஆகி­ய­வற்றில் முத­லீடு அதி­க­ரிக்கும்,’’ என, உலக தங்க கவுன்சில் நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர் சோம­சுந்­தரம் கூறி­யுள்ளார்.
கடந்த ஆண்டு துவக்­கத்தில், சர்­வ­தேச சந்­தையில் சரிவில் இருந்த தங்கம் விலை, தற்­போது வேக­மாக உயர்ந்து வரு­கி­றது. இதனால், உள்­நாட்டில்தங்கம் விலை அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)