பதிவு செய்த நாள்
10 மே2016
07:19
புவனேஸ்வர்:டி.சி.பி., வங்கி, ஆதார் எண் அடிப்படையில் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் வசதியை, ஒடிசாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வசதியுள்ள ஏ.டி.எம்., மையத்தில், வழக்கமான முறையில், டெபிட் கார்டு மூலமாகவும் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
டி.சி.பி., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான முரளி எம்.நடராஜன் கூறியதாவது:ஆதார் அடிப்படையிலான ஏ.டி.எம்., வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது தனித்துவமிக்க, அருமையான வசதியாகும். வங்கியின் பல்வேறு வர்த்தக செயல்பாடுகளுக்கு, மிக முக்கியமான சந்தையாக, ஒடிசா விளங்குகிறது. இதையொட்டி, இம்மாநிலத்தில், ஆதார் அடையாள எண் மூலமாகவும் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|