பதிவு செய்த நாள்
10 மே2016
07:21
புதுடில்லி:‘மொபைல்போன் அல்லது தொலைபேசியில் பேசுவதற்காக அளிக்கப்பட்டுள்ள எண் மூலம், ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையத்தில் பேசும் வசதியை வழங்குவது சட்ட விரோதம்’ என, மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த அமைப்பு, தொலைத் தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் விவரம்:தொலைபேசி மற்றும் மொபைல்போன் சேவைகளுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றுக்கான தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு வசதியை, இணைய அழைப்புகளை இணைப்பதற்காக பயன்படுத்துவது சட்ட விரோதம். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இந்த ஒருங்கிணைப்பு முறையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மொபைல்போன் மற்றும் தொலைபேசி வாயிலாக இணையத்தில் பேசுவதற்கான விதிமுறை, புதிய ஒருங்கிணைந்த அலைவரிசை உரிமத்தில் தான் உள்ளது.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட தேசிய எண் திட்டத்தில் அதற்கான விதிமுறை இல்லை என்பதால் அத்தகைய சேவை, மொபைல்போன் சேவை நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல, பார்தி ஏர்டெல், ஐடியா செலுலார், வோடபோன், டெலினார் நிறுவனங்களும் கடிதம் எழுதியுள்ளன. விரைவில், தொலைத்தொடர்பு சேவையில் இறங்க உள்ள, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் இப்பிரச்னையில் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளதால், வாய் திறக்காமல் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|