பதிவு செய்த நாள்
11 மே2016
04:44
புதுடில்லி:கடும் இழப்பு காரணமாக, டாடா ஸ்டீல் நிறுவனம், பிரிட்டனில் உள்ள, அதன் உருக்கு தொழிற்சாலைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, இங்கிலாந்தில், போர்ட் டால்போட் நகரில் உள்ள, டாடா ஸ்டீல் உருக்காலையை விற்க, 150க்கும் அதிகமான நிறுவனங்களுடன் பேச்சு நடைபெற்றது. இந்நிலையில், டாடா உருக்கு தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக வந்த விண்ணப்பங்களில், 7 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய டாடா ஸ்டீல் நிர்வாக குழு கூறியுள்ளது. அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிடவில்லை.இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல், பிரிட்டனின் லிபர்டி குழுமம், கிரேபுல், அமெரிக்காவின் நுகோர் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் குழு ஆகியோர், டாடா உருக்காலையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|