பதிவு செய்த நாள்
11 மே2016
04:48
புதுடில்லி:இண்டிகோ நிறுவனம், இரண்டு நகரங்களுக்கு, கூடுதல் விமான சேவையை துவங்க உள்ளது. இண்டிகோ நிறுவனம், தற்போது, டில்லி – பெங்களூரு இடையில் நேரடியாக, 14 விமானங்களையும், டில்லி – சென்னை இடையில், 10 விமானங்களையும் இயக்கி வருகிறது. இந்த வழித்தடங்களில், அதிகம் பேர் பயணம் செய்வதாக தெரிகிறது. இதையடுத்து, டில்லி – பெங்களூரு இடையில், 15வது விமானத்தையும், டில்லி – சென்னை இடையில், 11வது விமானத்தையும் இயக்க, இண்டிகோ முடிவு செய்து உள்ளது. டில்லி – பெங்களூரு சேவை, ஜூன், 1; டில்லி – சென்னை விமான சேவை, ஜூன், 2ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த நிறுவனம், கொச்சி – மஸ்கட் இடையில், ‘நான் ஸ்டாப்’ விமான சேவையை, ஜூன், 21ம் தேதி முதல் இயக்க உள்ளது. இண்டிகோ நிறுவனம், தினமும், 40 நகரங்களுக்கு, 767 விமான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|