பதிவு செய்த நாள்
11 மே2016
04:55
புதுடில்லி:மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் தற்போதைய நிதிக் குழு, சில்லரை பணவீக்க இலக்கிற்கு தக்கபடி, வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்கவோ அல்லது உயர்த்தவோ பரிந்துரைக்கிறது. அதை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உரிமை உள்ளது.
இந்த நடைமுறையை மாற்றி, மத்திய அரசும், பல்துறை வல்லுனர்களும் இணைந்து நிதிக் கொள்கையை உருவாக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நிதி கொள்கை குழுவை அமைப்பதற்கான, நிதி மசோதாவுக்கு, ஓரிரு நாட்களில் பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெறப்படும். இக்குழுவில், ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர், செயல் இயக்குனரும், மத்திய அரசு சார்பில், பொருளாதாரம், வங்கி, நிதி ஆகிய துறைகளைச் சார்ந்த மூன்று வல்லுனர்கள் பெயர்கள் விரைவில் வெளியாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|