பதிவு செய்த நாள்
11 மே2016
04:56
புதுடில்லி:ஐடெல் மொபைல் நிறுவனம், இந்தியாவில், தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. டிரான்சியான் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஐடெல் மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், ஐரோப்பிய சந்தையில் முன்னணியில் உள்ளது. ஐடெல் நிறுவனத்திற்கு, சீனாவில், இரண்டு தொழிற்சாலைகளும், ஆப்ரிக்க நாடுகளில், நான்கு தொழிற்சாலைகளும் உள்ளன. உலகில், ஏழு கோடிக்கும் அதிகமானோர், ஐடெல் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த, 2015ல் மட்டும், மூன்று கோடி மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், ஐடெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள நொய்டா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில், புதிய தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. நொய்டாவில் அமைக்க உள்ள ஆலையின் மூலமாக மட்டும் தினமும், மூன்று லட்சம் ஐடெல் போன்களை உற்பத்தி செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|