பதிவு செய்த நாள்
11 மே2016
17:16
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. அடுத்தாண்டு முதல் இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட இருக்கிறது, அதன்படி மொரீசியஸ் வழியாக இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிதிக்கப்படும். இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 175.51 புள்ளிகள் சரிந்து 25,597.02-ஆகவும், நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 7,848.85-ஆகவும் இருந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கியபோது சென்செக்ஸ் 337 புள்ளிகளும், நிப்டி 107 புள்ளிகளும் சரிந்து இருந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1446 நிறுவன பங்குகள் சரிந்தும், 1103 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 158 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|