பதிவு செய்த நாள்
12 மே2016
01:11
லண்டன்:ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில், வங்கித் துறை குறித்து பேசியதாவது:சர்வதேச பொருளாதார பாதிப்பிற்கு பின், மூலதனத்தை அதிகரிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடன் கொடுப்பதிலும், வங்கிகள் எச்சரிக்கையுடன் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவை, அதிக இடர்பாடு உள்ள நாடாக, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியா, குறைவாக முதலீடு செய்யக்கூடிய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், அதிக மூலதனத்துடன், விரிவாக்கத்தில் ஈடுபடும் வழக்கம் உள்ள, வெளிநாட்டு வங்கிகள், இந்தியாவில் புதிய கிளைகள் திறப்பதை நிறுத்தி விட்டன. இத்தகைய சூழலில், சர்வதேச வங்கிகளை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவதில், பிரயோசனமில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|