பதிவு செய்த நாள்
12 மே2016
01:15
மும்பை:‘இந்தியாவின் தனி நபர் சொத்து மதிப்பு, கடந்த, 10 ஆண்டுகளில், சராசரியாக, 400 சதவீதம் உயர்ந்துள்ளது’ என, நியு வேர்ல்டு வெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் ஆய்வறிக்கை விவரம்:இந்தியா, சீனா, வியட்னாம் போன்ற வளரும் நாடுகளில், 2005 – 15 வரையிலான ஆண்டு களில், மக்களின் சொத்து மதிப்பு, சராசரியாக, 400 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில்...இதே காலத்தில், ஐரோப்பிய மக்களின் சொத்து மதிப்பு, 5 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, ஐரோப்பிய குடிமகனின் சராசரி சொத்து, 86 ஆயிரம் டாலராக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் சராசரி சொத்து மதிப்பு, முறையே, 100 மற்றும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய செல்வந்தர்கள், அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கரீபியன் நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, ஐரோப்பாவில், சராசரி சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி போன்றவையும், ஐரோப்பாவை பாதித்துள்ளது.
ஆசியாவில்...வருமான வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் ஐரோப்பாவில் புதிய தொழில்கள் துவங்குவது குறைந்துள்ளது. அதனால், குறிப்பாக, தயாரிப்பு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு செல்கின்றன.
உள்நாட்டு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், ஐரோப்பாவைச் சேர்ந்த, கிரீஸ் உள்ளிட்ட சில நாடுகள் திணறுகின்றன. இதுபோன்ற காரணங்களால், ஐரோப்பாவின் தனி நபர் சராசரி சொத்து மதிப்பு, ஆசியாவை விட குறைந்துள்ளதுஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|