இந்­தியர் சொத்து 400 சத­வீதம் வளர்ச்சிஇந்­தியர் சொத்து 400 சத­வீதம் வளர்ச்சி ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.63 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.63 ...
தனி­யா­ருக்கு ‘கொழுத்த’ வாய்ப்பு கல்வி துறையின் சந்தை மதிப்பு ரூ.7.80 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2016
01:19

மும்பை:‘கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், 6.42 லட்சம் கோடி ரூபா­யாக இருந்த, இந்­திய கல்வித் துறையின் சந்தை மதிப்பு, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், 7.80 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்’ என, ‘இந்த் – ரா’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்::நாட்டில், அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பாரம்­ப­ரி­ய­மான பள்­ளிகள் மற்றும் கல்­லுா­ரி­களின் எண்­ணிக்கை, அதி­க­ரித்து வரு­கி­ன்றன. அது­போல, தனியார் துறையில், ‘கிரீச்’ எனப்­படும், குழந்தை பாது­காப்பு கூடங்கள், மழ­லையர் பள்­ளிகள், தொழிற்­கல்வி மையங்கள் ஆகி­ய­வையும் பெருகி வரு­கின்­றன.
வளமான வாய்ப்பு:தனியார் துறையைச் சேர்ந்த பல பல்­க­லைகள், வெளி­நாட்டு பல்­க­லை­க­ளுடன் இணைந்து, உயர்­த­ர­மான கல்­வியை போதிக்­கின்­றன; அவற்றில், மாணவர் சேர்க்­கையும் அதி­க­மாக உள்­ளது. கடந்த, 2008 – 09ம் நிதி­யாண்டில், நாட்டின் மொத்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில், தனி­யாரின் பங்கு, 3 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2014 – 15ம் நிதி­யாண்டில், 29 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
ஒரு சில தனியார் பல்­க­லைகள், குறு­கிய காலத்தில், சர்­வ­தேச பல்­க­லை­க­ளுடன் கூட்டு மேற்­கொண்டு, தகுதி வாய்ந்த கல்­வி­யா­ளர்­களை நிய­மித்து, தர­மான கல்­வியை போதித்து, சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளன. அங்­கீ­க­ரிக்கப் ­பட்ட மாணவர் சேர்க்­கையை கண்­கா­ணிக்கும் அமைப்பு இல்­லா­ததும், இவ்­வ­ளர்ச்­சிக்கு காரணம் எனலாம். கல்­வித்­து­றையின் பல்­வேறு பிரி­வு­களில், தேவைக்கும், அளிப்­பிற்கும் உள்ள இடை­வெளி அதி­க­ரித்து வரு­வது, வள­மான வர்த்­தக வாய்ப்­பிற்கு வழி­கோ­லு­வ­தாக உள்­ளது
இந்­திய கல்வித் துறை விரி­வ­டைந்து வரு­வதால், பள்ளி மற்றும் உயர்­கல்வி மையங்­களில், மாணவர் – ஆசி­ரியர் விகி­தாச்­சா­ரமும் அதி­க­மாக உள்­ளது. கிரா­மப்­பு­றங்­க­ளிலும், பெற்றோர், தங்கள் பிள்­ளை­களை, தனியார் பள்­ளி­களில் சேர்க்­கவே ஆர்வம் காட்­டு­கின்­றனர்.
தேவைகள் கடந்த, 2006ல், தனியார் பள்­ளி­களில், 6 – 14 வய­துள்ள குழந்­தை­களின் சேர்க்கை, 18.7 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2014ல், 30.8 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யாவில், வரும் ஆண்­டு­களில் மேலும், இரண்டு லட்சம் பள்­ளிகள், 35 ஆயிரம் கல்­லுா­ரிகள், 700 பல்­க­லைகள் மற்றும் நான்கு கோடி மாண­வர்­க­ளுக்­கான தொழிற்­கல்வி மையங்­க­ளுக்கு தேவை உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனால், இத்­து­றையில், தனி­யா­ருக்­கான வர்த்­தக வாய்ப்பும் பிர­கா­ச­மாக உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)