பதிவு செய்த நாள்
12 மே2016
09:49
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( மே 12, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் உயர்ந்து 25,700.92 புள்ளிகளாகவும், நிப்டி 25.05 புள்ளிகள் அதிகரித்து 7873.90 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, சிப்லா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடனும், ஹச்.டி.எப்.சி., வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. இருப்பினும் இந்திய பங்குச் சந்தைகள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதும் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தே காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|