பதிவு செய்த நாள்
13 மே2016
07:15
ஆமதாபாத்:புதிய டிராக்டர்களை விட, பயன்படுத்திய டிராக்டர்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2011-ம் ஆண்டில், 6.30 லட்சம் புதிய டிராக்டர்கள் விற்பனை ஆன நிலையில், தற்போது, 4.95 லட்சம் மட்டுமே விற்பனையாகிறது. இதற்கு, பருவம் தவறிய மழையால், வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதே முக்கிய காரணம். இதனால், புதிய டிராக்டர்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத், ம.பி., தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பயன்படுத்திய டிராக்டர்கள் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆண்டுதோறும், 10 – 15 சதவீதம் என்றளவில் இது வளர்ச்சி கண்டு வருகிறது. ‘விவசாயிகளிடம், பணப்புழக்கம் குறைவாக உள்ளதால், பயன்படுத்திய டிராக்டர்கள் விற்பனை, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது’ என்கிறது ஸ்ரீராம் ஆட்டோமால் இந்தியா நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|