பதிவு செய்த நாள்
13 மே2016
07:16
புதுடில்லி:‘மொபைல்போன் சேவை நிறுவனங்கள், துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு, வாடிக்கையாளருக்கு, ஒரு ரூபாய் வழங்க வேண்டும்’ என, ‘டிராய்’ அமைப்பு பிறப்பித்த உத்தரவை, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு தொலை தொடர்பு வட்டத்தில், ஒரு மாதத்தில் துண்டிக்கப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை, 2 சதவீதத்தை தாண்டக் கூடாது என, டிராய் கூறியுள்ளது. ஏர்டெல், அதை, 1.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பிற்கு மேல், 0.01 சதவீதம் என்ற அளவில் உயரும், துண்டிக்கப்படும் அழைப்புக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சி திட்டத்திற்கு, நிறுவனம் வழங்கும். அதிகபட்சமாக, ஓராண்டில், 100 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|