பதிவு செய்த நாள்
14 மே2016
07:59
பீஜிங் : சீனாவைச் சேர்ந்த, ‘தீதி சுக்ஸின்’ நிறுவனம், வாடகை கார் ஓட்டுனர்கள் – பயணிகள் இடையே, பரஸ்பர பயணத் தேவைக்கான தகவல் சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ‘ஆப்’–ஐ, 30 கோடிக்கும் அதிகமானோர், மொபைல் போனில் பதிவிறக்கி உள்ளனர். அதன் மூலம், சீனாவின், 400 நகரங்களில், தினமும், 1.10 கோடி பேர், ‘தீதி’ வாடகை காரில் பயணிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ள இந்நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஆப்பிள்’ நிறுவனம், 6,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. சீனாவில், வாடகை கார் சேவை நிறுவனம் ஒன்று, ஒரே நிறுவனத்திடம் இருந்து, இந்த அளவிலான பெருந்தொகையை முதலீடாக பெற்றிருப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில், தீதிக்கு கடும் போட்டியாக, ‘ஊபர்’ நிறுவனம் விளங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|