நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம்நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ...
நான்கு ஆண்­டு­களில் ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை மூன்று மடங்கு விரி­வ­டையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
07:45

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், 50 கோடி டால­ராக உள்ள, ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை, வரும், 2020ல், 136 கோடி டாலர் மதிப்­பு­மிக்­க­தாக வளர்ச்சி காணும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ரசா­யன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்­துகள் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தாமல், இயற்கை உரங்கள் மூலம் வேளாண் பொருட்­களை உற்­பத்தி செய்யும் முறைக்கு, ‘ஆர்­கானிக்’ விவ­சாயம் என்று பெயர். இவ்­வகை, இயற்கை விவ­சா­யத்தில் உற்­பத்­தி­யாகும் உணவுப் பொருட்கள், உடல் ஆரோக்­கி­யத்­திற்கு பாது­காப்­பா­னவை. அதே சமயம், இயற்கை விவ­சா­யத்தில், உற்­பத்தி குறை­வாக உள்­ளதால், இவ்­வகை வேளாண் பொருட்­களின் விலை அதி­க­மாக உள்­ளது. இருந்­த­போ­திலும், ஆர்­கானிக் உணவுப் பொருட்­க­ளுக்கு, இந்­தியா உட்­பட, உலக நாடு­களில் மவுசு பெருகி வரு­கி­றது. உல­க­ளவில், 82 நாடு­களில், இயற்கை விவ­சாய ஒழுங்­கு­முறை சட்­டங்கள் உள்­ளன.
இந்­தி­யாவில், 100 சத­வீதம் இயற்கை விவ­சாயம் நடை­பெறும் முதல் மாநிலம் என்ற சிறப்பை, சிக்கிம் பெற்­றுள்­ளது. மத்­திய பிர­தேசம், மஹா­ராஷ்­டிரா, ஒடிசா, மிசோரம், கேரளா உள்­ளிட்ட, 13 மாநி­லங்கள், முழு­மை­யான இயற்கை விவ­சாயம் என்ற இலக்­குடன் செயல்­பட்டு வரு­கின்­றன. கடந்த, 2014, மார்ச் நில­வ­ரப்­படி, இயற்கை விவ­சாய நிலப் பரப்பு, 47.20 லட்சம் ஹெக்டேர் ஆக உள்­ளது. இதில், 6.5 லட்சம் விவ­சா­யிகள் ஈடு­பட்­டுள்­ளனர். கடந்த, 2014ல், இயற்கை விவ­சா­யத்தில் உற்­பத்தி செய்­யப்­பட்ட உணவு பொருட்­களின் மதிப்பு, 36 கோடி டால­ராக இருந்­தது. இது, தற்­போது, 50 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. அடுத்த, நான்கு ஆண்­டு­களில், இச்­சந்தை, 136 கோடி டால­ராக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இயற்கை உணவுப் பொருட்கள் உற்­பத்­தியில், பருப்பு வகைகள் முத­லி­டத்­திலும், அடுத்து, நெல் உள்­ளிட்ட உணவு தானி­யங்­களும் உள்­ளன. பல்­வேறு இடர்­பா­டு­க­ளுக்கு நடுவே, இயற்கை விவ­சாயம் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. செயற்கை ரசா­ய­னங்­களால் பாழ்­பட்ட விளை­நி­லத்தை, இயற்கை விவ­சா­யத்­திற்கு ஏற்ற நில­மாக மாற்ற, மூன்று ஆண்­டுகள் ஆகும். அதனால் ஏற்­படும் இழப்பை கருதி, பலர், இயற்கை விவ­சா­யத்­திற்கு மாற தயங்­கு­கின்­றனர். அந்த இழப்பை ஈடு செய்ய, மத்­திய, மாநில அர­சுகள் முன் வர வேண்டும். அவை அளிக்கும் ஊக்­கத்தை பொறுத்தே, வள­மான வர்த்­தக வாய்ப்பு கொண்ட, இயற்கை விவ­சாயம் விரைந்து வளர்ச்சி காணும் என, அசோசெம் தெரி­வித்­துள்­ளது.
மத்திய அரசு, மூன்று ஆண்டுகளில், 412 கோடி ரூபாய் திட்டச் செலவில், 5 லட்சம் ஏக்கர் பரப்பை, இயற்கை விளை நிலமாக மாற்ற, இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)