பதிவு செய்த நாள்
19 மே2016
06:57
ஆமதாபாத் : மன்பசந்த் நிறுவனம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இளநீரை அறிமுகம் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மன்பசந்த் நிறுவனம், பழச்சாறு விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், ‘கோகோ சிப்’ என்ற பெயரில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இளநீரை அறிமுகம் செய்துள்ளது. இதை நாடு முழுவதும் விற்பனை செய்ய, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மன்பசந்த் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகில், தேங்காய் உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக, வளர்ந்த நாடுகளில், இளநீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், இளநீர் தேவை அதிகரித்து வருவதால், அவற்றை, 100 சதவீதம் இயற்கை மாறாமல், பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய உள்ளோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|