பதிவு செய்த நாள்
19 மே2016
06:58
புதுடில்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்மார்ட் போன் விற்பனையில், ஐந்தாவது இடத்தை பிடித்து உள்ளதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், பல நிறுவனங்கள், புதிய வகை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜன., முதல், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஸ்மார்ட் போன்கள் விற்பனை, 8.2 சதவீதம் குறைந்து, 2.35 கோடியாக குறைந்துள்ளது.
அதேசயம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து உள்ளது. இதற்கு, இந்த நிறுவனத்தின், ‘4ஜி’ வகை மொபைல் போன்கள் விற்பனையே முக்கிய காரணம். இந்த நிறுவனத்தின், 4ஜி மொபைல் போன் விற்பனை கடந்த காலாண்டில், ஆறு மடங்கு அதிகரித்து, 1.54 கோடியாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|