பதிவு செய்த நாள்
19 மே2016
06:59
புதுடில்லி : ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், தன் வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு தேவையான, நிதி உதவி கிடைப்பதற்காக, இண்டஸ் இந்த் பேங்க் உடன் இணைந்துள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, ஓர் ஆண்டில், 44.80 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.இதற்காக, அந்த நிறுவனம், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இண்டஸ் இந்த் பேங்க் உடன் இணைந்து, எளிய முறையில் கடன் வழங்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், 90 சதவீதம் அளவுக்கு கடன் வசதி பெறமுடியும். மேலும் கூடுதலாக 7,400 ரூபாய் அளவுக்கான வேறு சில சலுகைகளையும் அடைய முடியும் என, ஹோண்டா தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|