பதிவு செய்த நாள்
19 மே2016
07:03
புதுடில்லி : பாரத ஸ்டேட் வங்கி, தன் ஐந்து உப வங்கிகளை இணைக்க திட்டமிட்டு உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூர்; ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத்; ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்; ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலா; ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய, ஐந்து உப வங்கிகளையும் தன்னுடன் இணைக்க, எஸ்.பி.ஐ., திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மத்திய அரசிடம், கொள்கை அளவிலான ஒப்புதலுக்கு கேட்டுள்ளது.இந்த ஐந்து வங்கிகளுடன், அண்மையில் துவக்கப்பட்ட பாரதிய மகிளா வங்கியையும் இணைக்கும் முடிவில் இருக்கிறது, எஸ்.பி.ஐ.,
இதுகுறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த இணைப்பின் மூலம், வங்கியின் வணிகம் அதிகரிக்கும். உப வங்கிகளை இணைக்கும் முயற்சிகள் அனைத்தும், ஒளிவு மறைவு இல்லாத, வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|