பதிவு செய்த நாள்
19 மே2016
07:04
புதுடில்லி : ‘வேலைவாய்ப்பு, தனி நபர் பணப்புழக்கம் உள்ளிட்ட அம்சங்களில், உலகளவில், இந்தியர்கள், மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர்’ என, ‘நீல்சன்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தாண்டு, ஜன., – மார்ச் வரை, நீல்சன் வலைதளம் நடத்திய ஆய்வில், 63 நாடுகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் அதிகமான நுகர்வோர்கள் பங்கேற்றனர்.
ஆய்வறிக்கை விவரம்: வேலைவாய்ப்பு, தனி நபர் பணப்புழக்கம் மற்றும் செலவழிப்புக்கான, இந்தியாவின் ‘நுகர்வோர் நம்பிக்கை குறியீடு’ 3 புள்ளிகள் அதிகரித்து, 134 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, 2007க்குப் பின் காணப்படும் நிலையாகும். இந்த குறியீடு, முந்தைய மூன்று காலாண்டுகளில், 131 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், 119; இந்தோனேஷியா, 117; அமெரிக்கா, 110; சீனா, 105 ஆகியவை உள்ளன. வேலைவாய்ப்பு குறித்து நம்பிக்கை உள்ளதாக, இந்திய நகர்புறங்களைச் சேர்ந்த, 83 சதவீதத்தினர் தெரிவித்தனர். தனி நபர் பணப்புழக்கம் நன்கு உள்ளதாக, 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கவலைக்குரிய அம்சங்களை பொறுத்தவரை, பணி பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம், உலக வெப்பமயம், ஆரோக்கியம் ஆகியவற்றை வரிசைப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், இந்தியாவில், நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.ஆய்வில், 66 சதவீதம் பேர், இந்தியா, அடுத்த ஓராண்டிற்குள், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு விடும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|