பதிவு செய்த நாள்
20 மே2016
07:19
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய ஆல்டோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டில், கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆல்டோ கார், அதன் விலை மற்றும் எரிபொருள் சிக்கனம் காரணமாக, அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஆல்டோ கார், மாருதி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய காரின் விலை, டில்லியில், 2.55 லட்சம் ரூபாய் முதல், 3.76 லட்சம் ரூபாய் வரை உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 24.70 கி.மீ., துாரம் செல்லும். பழைய ஆல்டோவுடன் ஒப்பிடும்போது, இது 9 சதவீதம் அதிகமாகும். கடந்த, 12 ஆண்டுகளுக்கு மேல் விற்பனையில் இருக்கும் ஆல்டோ கார்கள், இந்திய சாலைகளில், 30 லட்சத்திற்கும் அதிகமாக ஓடுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|