பதிவு செய்த நாள்
20 மே2016
07:21
மும்பை : நடப்பு நிதியாண்டில், எல்.ஐ.சி., நிறுவனம், நான்கு கோடி புதிய பாலிசிகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஆயுள் காப்பீட்டு துறையில், கடந்த நிதியாண்டில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு, 70.44 சதவீதம் ஆகும். நடப்பு நிதியாண்டில், நான்கு கோடி பாலிசிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக, இரண்டு லட்சம் புதிய ஏஜன்ட்களை நியமிக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆயுள் காப்பீட்டு துறையில், தனியார் நிறுவனங்களை விட, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தான் அதிகம் பேர் காப்பீடு எடுக்கின்றனர். 2014 – 2015ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவை 2015 – 12016ம் ஆண்டில் சரி செய்துவிட்டோம். நடப்பு நிதியாண்டில், நான்கு கோடி புதிய பாலிசிகளை விற்பனை செய்ய, இரண்டு லட்சம் ஏஜன்ட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|