பதிவு செய்த நாள்
20 மே2016
07:24
புதுடில்லி : மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள, தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இக்கொள்கை தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘புதிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையில், பல நல்ல அம்சங்கள் உள்ளன’ என, அமெரிக்க வர்த்தக துறை செயலரும், வெளியுறவு வர்த்தக சேவை அமைப்பின் தலைமை இயக்குனருமான, அருண் எம்.குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் காப்புரிமை மற்றும் வணிக முத்திரை சார்ந்த நடைமுறைகள், ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. அறிவு சார் சொத்துரிமையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட, இக்கொள்கை வழி வகுக்கிறது என, அருண் எம். குமார் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|