பதிவு செய்த நாள்
20 மே2016
07:25
ஐதராபாத் : ‘‘காப்பீட்டு நிறுவனங்களுக்கான, பங்கு வெளியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும்,’’ என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: கடந்தாண்டு, காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனால், காப்பீட்டு துறையில், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அன்னிய நேரடி முதலீடு குவிந்தது. இத்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பங்கு வெளியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில், புதிய விதிமுறைகள் வெளியிடப்படும். ஒருசில காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.
கடந்த நிதியாண்டில், ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு துறைகள், முறையே, 12 மற்றும் 14 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. மருத்துவ காப்பீட்டு துறை, 40 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், காப்பீட்டு துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும், சிறப்பாக செயல்பட்டன. இதே நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டிலும், இத்துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்இவ்வாறு டி.எஸ்.விஜயன் கூறினார்.
எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஆகிய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|