பதிவு செய்த நாள்
21 மே2016
05:02
சென்னை:ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, ‘டெய்ம்லர்’ கனரக வாகன நிறுவனம், சென்னையில் வர்த்தக வாகனங்களுக்கான பிராந்திய மையத்தை திறந்துள்ளது.இந்த மையமானது நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில், பாரத் பென்ஸ் லாரிகள், மெர்சிடஸ் பென்ஸ் லாரிகள், பஸ்கள் ஆகியவற்றின் விற்பனை மற்றும் சேவைகளை மேற்பார்வையிடும்.
டெய்ம்லர் நிறுவனம், ஏழு மாதங்களுக்கு முன், வர்த்தக வாகனங்களுக்கான தன் முதல் பிராந்திய மையத்தை துபாயில் துவக்கியது. இப்போது, சென்னையிலும் பிராந்திய மையத்தை துவக்கி இருப்பதன் மூலம், வர்த்தக வாகனங்களுக்கான வளர்ச்சி இருக்கும் பகுதிகள் முழுவதையும் கவனித்துக் கொள்வதற்கான தேவையை பூர்த்தி செய்துள்ளது.தெற்காசியாவில் சென்னையைச் சேர்த்து மொத்தம், ஆறு பிராந்திய மையங்களை டெய்ம்லர் துவக்கி இருக்கிறது. இத்தகைய மையங்கள் மூலம், வர்த்தக வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க முடியும் என்கிறது, டெய்ம்லர் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|