பதிவு செய்த நாள்
21 மே2016
05:05
புதுடில்லி;சர்க்கரை விலை, சில மாதங்களாக உயர்ந்து வருவதால், அதன் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.ஏற்கனவே, மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளின் சர்க்கரை இருப்பிற்கு, மத்திய அரசு வரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உள்நாட்டில், சர்க்கரை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அதன் விலையேற்றத்தை தடுக்கவும், ஏற்றுமதி மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக இந்த மானியம் செலுத்தப்பட்டு வந்தது.ஒரு ஹெக்டரில், 700 குவின்டால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிக்கு, 2,000 ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி மானியம் கிடைத்தது. வரும் செப்டம்பருடன் முடிவடையும், நடப்பு, 2015 – 16 சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.52 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|