பதிவு செய்த நாள்
21 மே2016
05:09
புதுடில்லி;எச்.எஸ்.பி.சி வங்கி, தன் ஒருங்கிணைப்பு முயற்சியின் ஒரு கட்டமாக, வங்கி கிளைகளின் எண்ணிக்கையை, கிட்டத்தட்ட பாதியாக குறைக்க உள்ளது. இதன் காரணமாக, 300 ஊழியர்கள் வேலையிழப்புக்கு ஆளாகக்கூடும்.பிரிட்டனைச் சேர்ந்த வங்கியான, எச்.எஸ்.பி.சி., இந்தியாவில் தன் கிளைகளை பாதியளவுக்கு குறைத்து, 26 கிளைகளுடன், 14 நகரங்களில் மட்டுமே செயல்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த வங்கிக்கு, 29 நகரங்களில், 50 கிளைகள் உள்ளன. கிளைகளை குறைப்பதன் மூலம், 300 பேர்களுக்குஅதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழக்கக் கூடும் என, தெரிகிறது. இவ்வங்கியில் நாடு முழுவதும், 33 ஆயிரம் பேர்களுக்கு மேல் பணிபுரிகின்றனர். இவர்களோடு ஒப்பிடுகையில், 1 சதவீதம் பேர்கள் வேலையிழப்புக்கு ஆளாகின்றனர். டிஜிட்டல் பேங்கிங் முறையை, அதிக வாடிக்கையாளர்கள் நாடுவதால், இந்த நடவடிக்கை என்கிறது வங்கி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|