மத்­திய அரசின் கொள்கை மாற்­றத்தில் மந்­த­நிலைமத்­திய அரசின் கொள்கை மாற்­றத்தில் மந்­த­நிலை ... மின்­னணு வர்த்­த­கத்தில் மதிப்­பி­ழக்கும் வலை­த­ளங்கள் மின்­னணு வர்த்­த­கத்தில் மதிப்­பி­ழக்கும் வலை­த­ளங்கள் ...
ஆசிய பிராந்­தி­யத்தில்...அபார வளர்ச்­சியில் இந்­திய சந்தை அச்­சத்தில் சீனா அலறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2016
05:15

பீஜிங்:உலகில், அதிக மக்கள் தொகை உள்ள சீனா, நுகர்வோர் சந்­தையில் முத­லி­டத்தில் உள்­ளதில் வியப்­பேதும் இல்லை. எனினும், இந்­தி­யாவின் நுகர்வோர் சந்தை வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­வது, சீனா­வுக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதை, சீனாவின் தேசிய பத்­தி­ரி­கை­யான, ‘குளோபல் டைம்ஸ்’ கட்­டுரை தெரி­விக்­கி­றது.
அதன் விவரம்:இந்­திய பொரு­ளா­தாரம் வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­கி­றது. மக்­களின் வரு­வாய்க்­கேற்ப, தேவை அதி­க­ரித்­துள்­ளது; அவர்கள், பல்­வேறு பொருட்­களை வாங்க, அதிகம் செல­வி­டு­கின்­றனர். அதற்­கேற்ப, பல­த­ரப்­பட்ட பொருட்கள் சந்­தையில் குவி­கின்­றன. இத்­த­கைய நுகர்வோர் சந்தை, வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது.
அதை பயன்­ப­டுத்திக் கொள்ளும் நோக்கில், வெளி­நாட்டு நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் கால் பதித்து வரு­கின்­றன. புதிய முத­லீட்டு மைய­மாக இந்­தியா உரு­வெ­டுத்து வரு­கி­றது. கடந்த, 2014ல், பிர­தமர் மோடி தலை­மையில் அமைந்த அரசு, உள்­நாட்டு தயா­ரிப்­பு­களை ஊக்­கு­விக்கும் நோக்கில், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அது முதல், சீனாவின் தயா­ரிப்பு துறை, இந்­தி­யா­விற்கு மாறி வரு­கி­றது.
ஒரு கட்­டத்தில், இந்­திய நுகர்வோர் சந்தை, சீனா­வையே விஞ்சக் கூடிய சாத்­தியம் உள்­ளது. அந்த அள­விற்கு, சீனா­வுக்கு கடும் போட்­டி­யாக இந்­தியா உரு­வெ­டுத்து வரு­கி­றது. சீனாவைப் போல், இந்­தி­யாவும், மலிவு விலையில் பொருட்­களை தயா­ரிக்கும். மக்­களின் தேவை அதி­க­ரித்து வரு­வது, நுகர்வோர் சந்­தையின் வளர்ச்­சிக்கு வழி வகுத்­துள்­ளது. குறைந்த ஊதி­யத்தில் கிடைக்கும் தொழி­லா­ளர்கள், தயா­ரிப்பு துறைக்கு அரசு அளிக்கும் சலு­கைகள் போன்­றவை, இந்­திய தயா­ரிப்பு துறையை ஊக்­கு­வித்து வரு­கின்­றன. இதன் கார­ண­மாக, சீனாவின், ‘ஜியோமி’ உள்­ளிட்ட பல நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில், ‘ஸ்மார்ட்போன்’ தயா­ரிப்பில் இறங்­கி­யுள்­ளன.
இந்­தி­யாவின் எழுச்சி, சீனாவின் தயா­ரிப்பு துறைக்கு சவா­லாக உள்­ளது.‘21ம் நுாற்­றாண்டின் புதிய, பெரிய சந்­தை­யாக இந்­தியா உரு­வாகும்’ என, ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்­தி­யாவின் வர்த்­தக சூழல் மேலும் மேம்­ப­டும்­பட்­சத்தில், சர்­வ­தேச நாடு­களின் தேவைக்கும், அளிப்­பிற்கும் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கக் கூடிய நாடாக, அது உரு­வெ­டுக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)