பதிவு செய்த நாள்
22 மே2016
04:07
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் ஐந்து துணை வங்கிகளையும், பெண்களுக்கான பாரதிய மகிளா வங்கியையும் இணைக்கத் தயாராக உள்ளதாக, சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளைச் சேர்ந்த, ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இணைப்பு நடவடிக்கையை கண்டித்து, ஜூன், 7 மற்றும் ஜுலை, 20ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறுகையில், ‘‘இணைப்பு நடவடிக்கையால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் என்ற வாதம், ஆதாரமற்றது. இணைப்பு பேச்சு துவங்கும் போதெல்லாம் இதுபோன்ற சந்தேகமும், அச்சமும் எழுகின்றன. எனினும், பேச்சு நடக்கும் போது, இது தொடர்பான அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும்,’’ என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|