பதிவு செய்த நாள்
26 மே2016
00:13
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், தன் உத்தேச மூலதன செலவுத் தொகையில், 40 சதவீதத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், புதிய தயாரிப்புகளுக்காக, நடப்பு நிதியாண்டில், 4,400 கோடி ரூபாயை மூலதன செலவுகளுக்காக ஒதுக்கியிருந்தது. இதிலிருந்து, 2,000 கோடி ரூபாய் செலவில், ஹரியானா மாநிலத்தில், ரோடக் என்ற இடத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூடம், மற்றும் பரிசோதனை மையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன் கூறியதாவது: தற்போது கார்களை சோதனை செய்வதற்காக ஜப்பானுக்கு அனுப்பி வருகிறோம். இனி இங்கு ஏற்படுத்தப்படும் மையத்திலேயே சோதனை செய்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|