பதிவு செய்த நாள்
26 மே2016
00:16
மும்பை : இந்தியாவில், பொது துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, 56 வங்கிகளின், 1,97,327 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், பல்வேறு இடங்களில் அமைந்துள்ள, 4,000 ஏ.டி.எம்.,களை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஆயிரத்திற்கும் அதிகமான ஏ.டி.எம்.,கள் செயல்படாமல் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறியதாவது: வங்கிகள், ஏ.டி.எம்.,களை சரிவர நிர்வகிப்பதில்லை. ஆய்வில், மூன்றில் ஒரு பங்கு ஏ.டி.எம்.,கள், செயல்படாமல் இருந்துள்ளன. அவற்றில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவக் கூடிய, தகவல் பலகைகள் இல்லை. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படவில்லை. இதுபோன்ற குறைகள் உள்ள ஏ.டி.எம்.,கள் தொடர்பாக, வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|