பதிவு செய்த நாள்
27 மே2016
09:56
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில், நேற்றைய அதிரடி உயர்வு நிலை இன்றும் தொடர்கிறது. நிப்டி, ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் 8100 புள்ளிகளை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 78.72 புள்ளிகள் உயர்ந்து 26445.40 புள்ளிகளாகவும், நிப்டி 24.25 புள்ளிகள் அதிகரித்து 8093.90 புள்ளிகளாகவும் இருந்தன. 504 பங்குகள் ஏற்றத்துடனும், 204 பங்குகள் சரிவுடனும், 34 பங்குகள் எவ்வித மாற்றமின்றியும் காணப்படுகின்றன.
லுபின், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் உயர்வின் காரணமாகவும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளதும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இந்திய பங்குச்சந்தைகள் 10 முதல் 15 சதவீதம் வரை ஏற்றம் பெறும் என சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|