பதிவு செய்த நாள்
27 மே2016
15:04
கோவை,: அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தியால், தொழில் துறையினர் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.தமிழக மின் உற்பத்தியில், காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மொத்தம், 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் நிறுவப்பட்டு உள்ளன; 7,500 மெகாவாட் மின் உற்பத்திக்கான திறன் கொண்டுள்ளன.நடப்பாண்டு, மார்ச் 14ம் தேதி முதல், தென்மேற்கு பருவக்காற்று வீச துவங்கியது. காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், காற்றாலை மின் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்து வருகிறது.இரு நாட்களுக்கு முன், ஒரே நாளில், 8 கோடி யூனிட் மின்சாரம், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அன்று, தமிழகத்தின் மொத்த மின் தேவையில், காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு, 30 சதவீதமாக உயர்ந்தது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறுகையில், ''உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை, உடனுக்குடன் அரசு பெற்று வருகிறது. இத்துறை வளர்ச்சியை கருதி, அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|