பதிவு செய்த நாள்
28 மே2016
05:11
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், தன் பலேனோ மற்றும் டிஸையர் கார்களை, திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.மாருதி சுசூகி நிறுவனம், 75 ஆயிரத்து 419 பலேனோ கார்களையும், 1,961 டிஸையர் கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. அண்மையில்தான், 20,427 எஸ் கிராஸ் மாடல் கார்களை திரும்பப் பெற்றது. தற்போது ஏர்பேக் கண்ட்ரோலர் சாப்ட்வேரை மேம்படுத்தி தருவதற்காக திரும்பப் பெற்றுக் கொள்கிறது. கூடவே, 16,000 பலேனோ டீசல் கார்களில் எரிபொருள் பில்டரில் பிரச்னை இருக்கிறதா என பார்த்து தருவதாகவும், தேவைப்பட்டால் அதை மாற்றிக் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மே 31 முதல் வாடிக்கையாளர்கள் டீலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறது மாருதி நிறுவனம்.பலேனோ மற்றும் எஸ் கிராஸ் கார்கள், கடந்த நிதியாண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|