பதிவு செய்த நாள்
28 மே2016
05:12
மும்பை : வங்கியில் பெற்ற கடனை, வசதி இருந்தும் திருப்பி தராதவர்கள் குறித்து, அரசும், வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இது குறித்து, ‘செபி’ வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கியில் வாங்கிய கடனை, வசதி இருந்தும் தராமல் உள்ள நிறுவனர்கள், இயக்குனர்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர், பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டுவது, தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகையோர், பரஸ்பர நிதியம், பங்குத் தரகு நிறுவனங்கள் போன்றவற்றை ஏற்படுத்தவும், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டவும் அனுமதி மறுக்கப்படும். இந்த நடைமுறைகள், இம்மாதம், 25ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|