பதிவு செய்த நாள்
28 மே2016
05:13
புதுடில்லி : எல்.ஜி., நிறுவனம், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. கொரியா நாட்டை சேர்ந்த எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எல்.ஜி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளை துவக்குமாறு, எங்களுக்கு வேண்டுகோள்கள் வருகின்றன. சமீபத்தில், எல்.ஜி., நிறுவனம், ‘கே7, கே10’ மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இனி, இந்த போன்கள், நொய்டாவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படும். புதிய ஆலையில் வீட்டு சாதன உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|