கார்­களை விட இரு­சக்­கர வாக­னங்கள் ‘டாப்’கார்­களை விட இரு­சக்­கர வாக­னங்கள் ‘டாப்’ ... இந்­தியன் ஆயில் கார்ப்., லாபம் ரூ.10,399 கோடி இந்­தியன் ஆயில் கார்ப்., லாபம் ரூ.10,399 கோடி ...
சுயஉத­வி­ கு­ழுவின் வாராக்கடன்; ரிசர்வ் வங்கி கண்­கா­ணிக்க உத்­த­ரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
05:15

மும்பை : ‘சுயஉத­வி ­கு­ழுக்­களின் வாராக்கடன்­களை உட­ன­டி­யாக கண்­கா­ணிக்க வேண்டும்’ என, அனைத்து நகர்ப்­புற, மத்­திய, மாநில கூட்­டு­றவு வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி உத்­த­ரவு பிறப்­பித்­து உள்­ளது.
கிரா­மப்­பு­றங்­களில், சுய­வே­லை­வாய்ப்­பு­களை உரு­வாக்கி, வறு­மைக்­கோட்­டிற்கு கீழ் உள்ள மக்­களின் வாழ்­வா­தார முன்­னேற்­றத்­திற்கு, சுய உத­விக்­கு­ழுக்கள் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றன. பெண் உறுப்­பி­னர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட இக்­கு­ழுக்­க­ளுக்கு, வங்­கிகள், நுண்­கடன் நிறு­வ­னங்கள் ஆகி­யவை, கடன் வழங்­கு­கின்­றன. இந்­நி­லையில், 2014ல், ரிசர்வ் வங்கி, கடன் பெற்­றுள்ள சுய உத­விக்­குழு உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை வழங்­கு­மாறு, கூட்­டு­றவு வங்­கி­க­ளிடம் கேட்­டது. கடன் பெறும் சுய உத­விக்­குழு தலை­மையின் கீழ், 10 – 20 உறுப்­பி­னர்கள் உள்­ளதால், விவ­ரங்­களை சேக­ரிப்­பதில் உள்ள சிர­மங்­களை, வங்­கிகள் எடுத்­து­ரைத்­தன.
இது தொடர்­பாக, ரிசர்வ் வங்கி அமைத்த குழு ‘சுய உத­விக்­கு­ழுக்­களின் கடன் தகு­தியை நிர்­ண­யிக்­கவும், கடன் வழங்­கு­வது குறித்து, வங்­கிகள் முடிவு எடுக்­கவும், உறுப்­பி­னர்­களின் விவ­ரங்கள் மிகவும் இன்­றி­ய­மை­யா­தது’ என, சமீ­பத்தில் தெரி­வித்­தது.இதை­ய­டுத்து, ரிசர்வ் வங்கி, கூட்­டு­றவு வங்­கி­க­ளுக்கு அனுப்­பி­உள்ள அறிக்­கையில், ‘சுய உத­விக்­குழு உறுப்­பினர் குறித்த தக­வல்கள், கடன் விவ­ரங்கள் ஆகி­ய­வற்றை சேக­ரிக்கும் பணி, இரு கட்­டங்­க­ளாக நடை­பெறும்’ என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதன்­படி, கூட்­டு­றவு வங்­கி­களில், 1 லட்சம் ரூபாய்க்கும் அதி­க­மாக கடன் பெற்ற சுய உத­விக்­குழு உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை திரட்டும் பணி, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஓராண்டில் முடி­வ­டையும். அடுத்த ஆண்டு, ஜூலை 1 முதல், சுய உத­விக்­குழு உறுப்­பி­னர்­களின் கடன் சார்ந்த விவ­ரங்­களை சேக­ரிக்கும் பணி துவங்கும்.
இத்­துடன், ‘சுய உத­விக்­கு­ழுக்­களின் வாராக்கடன்­களை உட­ன­டி­யாக கண்­கா­ணிக்க வேண்டும்; வாராக்கடன், 10 சத­வீ­தத்தை தாண்­டி­யி­ருந்தால், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதி­க­மாக கடன் பெற்ற உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை சேக­ரிக்க வேண்டும்’ என, கூட்­டு­றவு வங்­கிகள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.சுய உதவிக் குழுக்கள், கடன் வழங்கும் உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை ஏட்­டிலோ அல்­லது ‘டிஜிட்டல்’ முறை­யிலோ பரா­ம­ரிக்க, வங்­கிகள் ஊக்­கு­விக்க வேண்டும். அத்­த­கைய குழுக்­க­ளுக்கு சலு­கைகள் வழங்­கு­வது குறித்தும் பரி­சீ­லிக்­கலாம் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
சுய உத­விக்­கு­ழுக்­களின் வாராக் கடன்­களை உட­ன­டி­யாக கண்­கா­ணிக்க வேண்டும்; வாராக்கடன், 10 சத­வீ­தத்தை தாண்­டி­யி­ருந்தால், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதி­க­மாக கடன் பெற்ற உறுப்­பி­னர்­களின் விவ­ரங்­களை சேக­ரிக்க வேண்டும்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)