பதிவு செய்த நாள்
29 மே2016
01:06
சென்னை:டொயோட்டா நிறுவனம், சென்னையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளது. இது இந்தியாவில் இந்நிறுவனத்தின் நான்காவது பள்ளியாகும்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டொயோட்டா நிறுவனம், கடந்த ஆண்டு மார்ச் மாதம், லக்னோவில் தன் முதல் பயிற்சி பள்ளியை ஆரம்பித்தது. அதன் பின்னர் ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் ஆரம்பித்தது. நான்காவதாக இப்போது சென்னையில் ஆரம்பித்துள்ளது. 'பாதுகாப்பான கார்; பாதுகாப்பான ஓட்டுனர்' என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பள்ளிகள் மூலம், திறமையான ஓட்டுனர்களை உருவாக்குவதோடு, தங்களது விற்பனையையும் அதிகரிக்க முடியும் என நம்புகிறது, டொயோட்டா கார் நிறுவனம்.இப்பள்ளியில், தனி நபர்களுக்காகவும் பெரு நிறுவனங்களுக்காகவும் என, இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் 5,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|