பதிவு செய்த நாள்
29 மே2016
01:07
புதுடில்லி:தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமான, என்.ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கை:சீனாவில் குயாங்க் நகராட்சி மற்றும் குய்ஸோ மின்னணு கல்லுாரியுடன், என்.ஐ.ஐ.டி., இரு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. இதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 ஆயிரம் மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப கல்வி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சியை, என்.ஐ.ஐ.டி., வழங்கும். இதன் மூலம், கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவர்.இத்துடன், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை ஊக்குவிக்கும், திறன் மேம்பாட்டு ஆய்வு மையம் ஒன்றும் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில், வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அதற்கேற்ப, கல்லுாரி மாணவர்கள் திறனை மேம்படுத்த, இந்த ஒப்பந்தங்கள் துணைபுரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|