பதிவு செய்த நாள்
30 மே2016
07:43
கொழும்பு : இலங்கையில், சிறிய ரக கார்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களின் சிறிய ரக கார்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.இலங்கையில், சிறிய ரக கார்களுக்கு, அதாவது, 800 சிசி முதல், 1,000 சிசி வரையிலான கார்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்தியாவில் இத்தகைய கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையைப் பொறுத்தவரை, 800 சிசி முதல், 1,000 சிசி வரையிலான கார்களில், இந்திய தயாரிப்பான மாருதியின் ‘வேகன் ஆர்’ அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. சிறிய கார்களுக்கு சலுகை கிடைத்திருக்கும் நிலையில், 1,000 சிசிக்கு மேல் உள்ள கார்களுக்கு, இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|