பதிவு செய்த நாள்
30 மே2016
07:45
புதுடில்லி : ‘இந்தியாவில், ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, வரும், 2018ல், 29 லட்சமாக உயரும்’ என, இந்திய பணியாளர் சம்மேளனமான – ஐ.எஸ்.எப்., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:இந்தியாவில், 2014ல், 13 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருந்தனர். இது, 2015ல், 17 லட்சமாக உயர்ந்து, தற்போது, 21 லட்சமாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது இடம்வரும், 2018ல், ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 29 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், உலகில் அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள, 11 மாநிலங்களில், 24 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிவர். அதில், மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடிக்கும்.
சட்டங்கள்அடுத்து, கர்நாடகா, உ.பி., தமிழகம், டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம் பெறும். நாட்டில், 2015 – 18 வரை, தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 12.3 சதவீதம் வளர்ச்சி காணும். அடுத்த, 20 ஆண்டுகளில், 90 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள், அமைப்பு சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்பு பெறுவர்; அமைப்பு சாரா துறையில், 1 சதவீதம் பேர், ஒப்பந்த தொழிலாளர்களாக மாறினால் கூட, 15 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும். ஆகவே, வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில், சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|