பெண்களுக்கான நிதி வழிகாட்டிபெண்களுக்கான நிதி வழிகாட்டி ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.28 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.28 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பேமென்ட் வங்­கிகள் மீதான ஈர்ப்பு குறை­கி­றதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
07:53

பேமென்ட் வங்­கிகள் துவக்­கு­வ­தற்­கான அனு­மதி பெற்ற நிறு­வ­னங்­களில் மூன்று நிறு­வ­னங்கள் இந்த முடிவை கைவி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளன. இதற்­கான கார­ணங்கள் என்ன?
பேமென்ட் வங்­கிகள் புதிய வகை வங்­கி­யாக இருப்­ப­தோடு இந்­திய வங்­கித்­து­றையில் பெரும் மாற்­றத்தை கொண்டு வரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இந்த வகை வங்­கி­களை துவக்க அனு­மதி பெற்ற 11 நிறு­வ­னங்­களில் மூன்று நிறு­வ­னங்கள் இந்த முடிவை கைவி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளன. கடந்த மார்ச் மாதம் சோழ­மண்­டலம் இன்­வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறு­வனம், பேமென்ட் வங்கி திட்­டத்தில் இருந்து பின்­வாங்­கி­யது. அண்­மையில் திலிப் சங்கி இந்த முடிவை அறி­வித்தார். அதன் பிறகு டெக் மஹிந்­திரா நிறுவனமும் பேமென்ட் வங்கி துவக்கும் திட்­டத்தை கைவி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளது.
புதிய கருத்தாக்கம்பேமென்ட் வங்­கிக்­கான கருத்­தாக்கம் 2014ல் ரிசர்வ் வங்­கியால் ஏற்­றுக்­கொள்ளப்­பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்­கான கொள்கை அள­வி­லான அனு­மதி வழங்­கப்­பட்­டது. இதற்­காக விண்­ணப்­பித்த 41 நிறு­வ­னங்­களில் 11 நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது. செயல்­பாட்டை துவக்க இவற்­றுக்கு 18 மாத கால அவ­காசம் அளிக்­கப்­பட்­டது.அனு­மதி பெற்ற இந்­திய தபால் துறை உள்­ளிட்­டவை புதிய வங்­கியை துவக்கும் முயற்­சியில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள நிலையில், மூன்று நிறு­வ­னங்கள் இந்த முடிவை கைவிட்­டுள்­ளன. வர்த்­தக செயல்­பா­டு­க­ளுக்­கான அதிக வாய்ப்­புகள் இல்­லா­தது, லாப விகிதம் தொடர்­பான கவலை மற்றும் அதி­க­ரிக்கும் போட்டி ஆகி­யவை இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.
பேமென்ட் வங்­கிகள், வழக்­க­மான வங்­கி­களை விட கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட செயல்­பா­டு­களை கொண்­டவை. அவை பிர­தா­ன­மாக பணம் அனுப்­புதல் மற்றும் பணம் செலுத்­துதல் சேவையை மொபைல் மூலம் வழங்கும். சேமிப்பு கணக்­கு­களை துவக்­கலாம் என்­றாலும், கடன் வழங்க அவற்­றுக்கு அனு­மதி இல்லை. ஒரு லட்சம் ரூபாய் வரை டிபாசிட் பெறலாம்.
தொழில்நுட்ப மாற்றம்அனை­வ­ருக்கும் வங்கி சேவை எனும் இலக்கை நிறை­வேற்றும் நோக்­கத்தில் இந்த வங்­கி­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்டுள்­ளது. குறிப்­பாக, கிரா­மப்­பு­றங்­களில், இன்­னமும் வங்­கிச்­சேவை பெறா­த­வர்­களை இவை சென்­ற­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பெரும்­பாலும் இவை மொபைல் போன் சார்ந்து செயல்­பட உள்­ளன. இந்த வகை வங்­கிகள் லாப­மீட்ட குறைந்­தது 3 முதல் 5 ஆண்­டுகள் ஆகலாம் என்று கூறப்­ப­டு­கி­றது. மேலும், லாப­மீட்ட, இவை கடும் போட்­டியை சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும் என்றும் கூறப்­ப­டு­கி­றது. பணம் செலுத்­துதல் மற்றும் பண பரி­வர்த்­தனை போன்­ற­வையே இவற்றின் பிர­தான செயல்­பா­டாக இருக்கும் என்­பதால் இவற்றின் மூல­மான கட்­ட­ணமே முக்­கிய வரு­வா­யாக இருக்கும்.
வழக்­க­மான வங்­கிகள் போல வட்டி வருவாய் இருக்­காது. அதே நேரத்தில் இந்த வங்­கிகள் டிபா­சிட்­டாக திரட்டும் தொகையில் பெரும் பகு­தியை அரசு பத்­தி­ரங்­களில் தான் முத­லீடு செய்ய வேண்டும் என்­பதும் லாப விகி­தத்தை பாதிக்கும். மேலும், இந்த வங்­கி­க­ளுக்­கான அனு­மதி வழங்­கப்­பட்ட பிறகு கடந்த பத்து மாதங்­களில் டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை துறையில் பெரும் தொழில்­நுட்ப மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. பண பரி­வர்த்­தனை வசதி எளி­தாகி இருப்­ப­தோடு, தேசிய பேமென்ட் கார்ப்­ப­ரே­ஷனின் ஒருங்­கி­ணைந்த பேமென்ட் முறை டிஜிட்டல் பண பரி­வர்த்­த­னையை மேலும் எளி­தாக்கி இருக்­கி­றது.
எதிர்காலம் என்ன?இந்த சேவையை பேமென்ட் வங்­கியை வேறு­ப­டுத்தும் முக்­கிய அம்­ச­மாக இருந்­ததால் தற்­போ­தைய நட­வ­டிக்­கைகள் இந்த ஈர்ப்பை வெகு­வாக குறைத்­து உள்ளது. எனினும், சோதனை முறையில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்ள இந்த வங்­கிகள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வல்­லவை என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. தொலை­தொ­டர்பு துறை நிறு­வ­னங்­க­ளுக்கு இவை மிகவும் ஏற்­ற­தாக இருக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. தற்­போது எஞ்­சி­யுள்ள நிறு­வ­னங்­களில் மூன்று தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவற்றை பொருத்­த­வரை பேமென்ட் வங்கி சேவை மூலம் வருவாய் ஈட்­டு­வதை விட வாடிக்­கை­யா­ளர்­களை தக்­க­வைத்துக் கொள்­ளவும், ஈர்க்­கவும் இது மிகவும் அவ­சியம் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)