பதிவு செய்த நாள்
31 மே2016
07:29
புதுடில்லி : அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், ‘ஐபோன், ஐபேட்’ சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது. இதுபோன்ற அன்னிய நிறுவனங்கள், 30 சதவீத உதிரிபாகங்களை, இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்தியாவில், தனக்கேற்ற அதிநவீன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் இல்லை என்பதால், 30 சதவீத கொள்முதல் விதிமுறையில் விலக்களிக்க வேண்டும் என, ஆப்பிள் கோரியது. அதை, நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஆப்பிள் ஐபோன்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்கப்படுவதால், ஆப்பிளுக்கு, 30 சதவீத கொள்முதல் விதிமுறையில் விலக்கு அளிக்கலாம். இது தொடர்பாகவும், உயர்தொழில்நுட்ப வரையறை குறித்தும், நிதியமைச்சகத்திடம் ஆலோசிக்கப்படும்,’’ என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|