தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ... சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாள்வதில் நவீன முறை அறிமுகம் சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாள்வதில் நவீன முறை அறிமுகம் ...
வெளிநாடுகளுக்கு பறக்கும் விருதுநகர் தேங்காய் நார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
12:10

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் சீனா போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வத்திராயிருப்பு, ராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூர், மம்சாபுரம், அய்யனார் கோயில், சுந்தரராஜபுரம், சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடியில் நூற்றுக் கணக்கில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பல ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.65 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது.அறுவடை பின்னர் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்பட்டவுடன், அதிலிருந்து பிரிக்கப்படும் மட்டைகளை தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கி செல்கின்றனர்.விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டையில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு மட்டையில் இருந்து தேங்காய் நாரை பிரித்தெடுக்கின்றனர். பின்னர் அதனை சுத்தப்படுத்தி சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் நார்கள் மும்பை, கோல்கட்டா ஆகிய வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தேங்காய் நார்கள் செங்கல் கட்டிகள் போல் தயாரிக்கப்பட்டு விவசாயத்திற்காக சீனா போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதன் மூலம் தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)