பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
12:10
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் சீனா போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வத்திராயிருப்பு, ராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூர், மம்சாபுரம், அய்யனார் கோயில், சுந்தரராஜபுரம், சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடியில் நூற்றுக் கணக்கில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பல ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.65 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது.அறுவடை பின்னர் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்பட்டவுடன், அதிலிருந்து பிரிக்கப்படும் மட்டைகளை தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கி செல்கின்றனர்.விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டையில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு மட்டையில் இருந்து தேங்காய் நாரை பிரித்தெடுக்கின்றனர். பின்னர் அதனை சுத்தப்படுத்தி சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் நார்கள் மும்பை, கோல்கட்டா ஆகிய வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தேங்காய் நார்கள் செங்கல் கட்டிகள் போல் தயாரிக்கப்பட்டு விவசாயத்திற்காக சீனா போன்ற வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதன் மூலம் தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|